இலங்கை இனப்படுகொலை: கண்டித்து மதிமுக உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
கோவை: இலங்கையில் நடந்து வரும் இனப்படுகொலையை தடுத்து நிறுத்தக் கோரி தமிழகம் முழுவதும் மதிமுகவினரின் ஒரு வார கால உண்ணாவிரதப் போராட்டம் இன்று தொடங்கியது.
இலங்கை இனப்படுகொலையைக் கண்டித்து மதிமுகவினர் ஒரு வார காலத்திற்கு உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துவார்கள் என கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்திருந்தார்.
இப்போராட்டம் இன்று தொடங்கியது. கோவை, பொள்ளாச்சி, பல்லடம், திருப்பூர், உடுமலைப்பேட்டை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் ஆயிரக்கணக்கானோர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
பொள்ளாச்சியில் தொடங்கிய உண்ணாவிரதத்திற்கு எம்.பி. கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.












Click it and Unblock the Notifications