வங்கக் கடலில் புதுப் புயல் சின்னம் - கன மழைக்கு வாய்ப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: வங்கக் கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதால் தமிழகம் முழுவதும் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் கிழக்கு வங்கக் கடலில் இந்த புயல் சின்னம் உருவாகியுள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் அடுத்த 2 நாட்களுக்கு கன மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று இரவு லேசான மழை பெய்தது. இன்று காலை முதல் வானம் மேக மூட்டமாக காணப்படுகிறது. காற்றும் வீசி வருகிறது.












Click it and Unblock the Notifications