இலங்கை: பழ.நெடுமாறன் ஆர்ப்பாட்டம் - கைது
Subscribe to Oneindia Tamil

சென்னை அண்ணா சாலை, பெரியார் சிலை அருகே இந்த ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது.
அப்போது செய்தியாளர்களிடம் பழ. நெடுமாறன் பேசுகையில், இலங்கைக்கு இந்திய அரசு ராணுவ உதவிகளை வழங்கக் கூடாது, உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்த வேண்டும் என்ற முக்கிய கோரிக்கைகளை இந்திய அரசு தொடர்ந்து செயல்படுத்த திட்டவட்டமாக மறுத்து வருகிறது.
தமிழகமெங்கும் உள்ள மக்கள், அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், அரசியல் சாரா அமைப்பினர் தமிழகமெங்கும் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆனால் இந்திய அரசு தொடர்ந்து மெளனம் சாதித்து வருகிறது என்றார்.
பின்னர் அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தியதாக கூறி பழ.நெடுமாறன் உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications