ரத்தம் சிந்துகின்றன எண்ணை நிறுவனங்கள்: பெட்ரோல் விலை குறைப்பு இல்லை - தியோரா
Subscribe to Oneindia Tamil
டெல்லி: எண்ணை நிறுவனங்கள் ரத்தம் சிந்தி வருகின்றன. இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பு சாத்தியமல்ல என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பு குறித்து பிரதமர் ஏற்கனவே தெளிவாக கூறி விட்டார். நானும் அதையே திரும்பக் கூறத் தேவையில்லை. எண்ணை நிறுவனங்கள் கடும் நஷ்டத்தில் உள்ளன. ரத்தம் சிந்திக் கொண்டுள்ளன. எனவே இப்போதைக்கு விலைக் குறைப்பு சாத்தியமில்லை.
ரூபாய்- டாலர் மதிப்பு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து நிலையற்று உள்ளன. எனவே இந்த நேரத்தில் விலைக் குறைப்பு செய்வது சரியாக இருக்காது. நாங்கள் விலையைக் குறைக்க விரும்புகிறோம். இருந்தாலும் ரூபாய் - டாலர் மதிப்பு அதை செய்ய விடாமல் தடுக்கிறது என்றார் தியோரா.












Click it and Unblock the Notifications