700 கி.மீ பாயும் செளர்யா அணு ஏவுகணை வெற்றிகரமாக சோதனை

600 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கக் கூடிய திறமை பெற்றது இந்த செளர்யா ஏவுகணை. இந்தியாவின் அதி நவீன ஏவுகணைகளில் செளர்யாவும் ஒன்று என்று டி.ஆர்.டி.ஓ. தெரிவித்துள்ளது.
ஒரிசா மாநிலம் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ஏவுகணை ஏவுதள மையத்தில் ரகசிய இடத்தில் வைத்து இந்தப் பரிசோதனை நடத்தப்பட்டது. 485 விநாடிகளுக்கு சோதனை நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செளர்யா ஏவுகணை, இரண்டு அடுக்குகளைக் கொண்டது. திட எரிபொருளால் இயங்கும். 1 டன் எடை கொண்ட சாதாரண வகை வெடிபொருட்களையும், அணு ஆயுதங்களையும் இதில் பொருத்தலாம்.
செளர்யா சாகரிகா அல்ல
இதற்கிடையே, நேற்று பரிசோதிக்கப்பட்ட செளர்யா ஏவுகணை, இந்தியாவின் நீர்மூழ்கிக் கப்பல்களில் பொருத்தப்படக் கூடிய கே-15 சாகரிகா வகை ஏவுகணைகளில் ஒன்று என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதை டிஆர்டிஓ மறுத்துள்ளது.
செளர்யாவுக்கும், சாகரிகாவுக்கும் எந்த வகையிலும் தொடர்பு இல்லை என டிஆர்டிஓ தெரிவித்துள்ளது.
செளர்யா ஏவுகணை, ராணுவத்தி்ற்காக உருவாக்கப்பட்டுள்ளதாக டிஆர்டிஓ விளக்கியுள்ளது.
பிரமோஸ் ஏவுகணையைப் போலவே, எளிதில் எடுத்துச் செல்லக் கூடிய வகையில், செளர்யா உருவாகியுள்ளதாகவும் டிஆர்டிஓ தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications