Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கேவலமான போலீஸ் - சரத்குமார் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அரசு அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள், சக மாணவர்களை வெறித்தனமாக தாக்கியபோது அதைத் தடுக்காமல் போலீஸார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது அதிர்ச்சி அளிப்பதாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

சென்னை சட்டக் கல்லூரியில் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கும், வெளியில் இருந்து வந்து படிக்கும் மாணவர்களுக்கும் ஏற்பட்ட தகராறில் ஒரு சில மாணவர்கள் கொலை வெறியோடு 2 மாணவர்களை தாக்கியதை டிவியில் பார்த்தபோது நெஞ்சே பதறிப் போனது.

இந்த கொடுமையான மோதலை தடுத்து நிறுத்த வேண்டிய போலீஸ் துறையினர் கைகட்டி வேடிக்கை பார்த்தது மிகவும் கேவலமான செயல்.

மாணவனின் உயிரைக் காப்பாற்ற வேண்டிய நிலையில், செயல்படாமல் நின்ற போலீஸ் துறையை வன்மையாக கண்டிக்கிறேன்.

உடனடியாக நீதி விசாரணைக் கமிஷன் அமைத்து கல்லூரி முதல்வர் முதல் கொடுஞ்செயல் புரிந்த மாணவர்கள், வேண்டுமேன்றே வேடிக்கை பார்த்த போலீஸ் துறை என அனைவரிடமும் நீதி விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் அனைவருக்கும் சட்டப்படி தண்டனை வழங்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+