10,000 ஊழியர்களை நீக்குகிறது சிட்டி குரூப்; மேலும் 32,000 ஊழியர்களை நீக்க முடிவு!!
10,000 ஊழியர்களை நீக்குகிறது சிட்டி குரூப்; மேலும் 32,000 ஊழியர்களை நீக்க முடிவு!!
நியூயார்க்: உலகம் முழுவதிலும் உள்ள தனது பல்வேறு கிளைகளில் பணியாற்றும் பத்தாயிரம் ஊழியர்களை இந்த மாதம் நீக்குகிறது சிட்டி வங்கி. மேலும் 32,000 ஆயிரம் பேரை நீக்கவும் முடிவு செய்துள்ளது.
சர்வதேச நிதி நெருக்கடியால் ஏற்பட்டுள்ள சிக்கல்களைச் சமாளிக்க உலகில் பல்வேறு நாடுகளில் உள்ள சிட்டி குரூப்பின் கிளைகளில் பணியாற்றும் ஊழியர்களைக் குறைக்குமாறு சிட்டி நிர்வாகம் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ சுற்றிக்கையை சமீபத்தில் வெளியிட்டுள்ளார் சிட்டி குரூப்பின் தலைமை நிர்வாகி விக்ரம் பண்டிட்.
கடந்த மாதம்தான் 13,000 ஆயிரம் பணியாளர்களை வேலைவிட்டு நீக்கியது சிட்டி குரூப்.
இந்த குழுமத்தில் மொத்தம் 3 லட்சத்து 52 ஆயிரம் ஊழியர்கள் உலகம் முழுவதும் பணியிலிருந்தனர். நிதி நெருக்கடியைத் தொடர்ந்து மொத்தம் 62,000 ஆயிரம் ஊழியர்களை நீக்க முடிவு செய்துள்ள சிட்டி வங்கி. இதுவரை 23,00 ஆயிரம் பேரை நீக்கிவிட்டது. மேலும் 32,000 ஆயிரம் பணியாளர்களை நீக்கவிருப்பதாக வால்ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications