சட்டக் கல்லூரி மோதல்-பகுஜன் கவுன்சிலரிடம் விசாரணை

Subscribe to Oneindia Tamil

Law college students brutally beaten by collegues
சென்னை: சட்டக் கல்லூரி மாணவர்கள் நடந்திய கலவரம், தாக்குதல் தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சியின் சென்னை மாநகராட்சி கவுன்சிலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் ஒரு பிரிவு மாணவர்கள் இன்னொரு பிரிவு மாணவர்கள் மீது நடத்திய பயங்கர தாக்குதலில் ஆறுமுகம், பாரதி கண்ணன், அய்யாத்துரை ஆகியோர் படுகாயமடைந்தனர்.

காயமடைந்த மாணவர்கள் தரப்பினர் இந்தத் தாக்குதலின் பின்னணியில் பகுஜன் சமாஜ் கட்சியின் கவுன்சிலர் ஆம்ஸ்ட்ராங் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

இதையடுத்து பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரான ஆம்ஸ்ட்ராங்கிடம் போலீசார் நேற்றிரவு விசாரணை நடத்தினர்.

எஸ்பிளனேடு காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டு அவரிடம் விசாரணை நடந்தது. இதுபற்றி தகவல் பரவியதும் பகுஜன் சமாஜ் கட்சியினர் காவல் நிலையம் முன் திரண்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் அவர் அனுப்பப்பட்டார். தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களுக்கு அவர் உதவியதாகவும் அடைக்கலம் கொடுத்தாகவும் புகார் கூறப்படுவதால் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கவுள்ளது. புகார் உறுதியானால் அவர் கைதாகலாம் என்றும் தெரிகிறது.

கடந்த மாநகராட்சித் தேர்தலின்போது வட சென்னை பகுதியில் திமுகவினர் நடத்திய பெரும் கலவரத்தையும் மீறி சுயேச்சையாக வென்றவர் ஆர்ம்ஸ்ட்ராங் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் அவரு உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி முன்னிலையில் பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்தார்.

மண்டையில் கீறல்-மாணவருக்கு இன்று ஆபரேசன்:

இதற்கிடைய தாக்குதலில் காயமடைந்த ஆறுமுகம், பாரதி கண்ணன், அய்யாத்துரை ஆகியோர் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆறுமுகத்தின் மீது நடந்த உருட்டுக் கட்டை தாக்குதலில் அவரது மண்டையில் கீறல் விழுந்துள்ளது. மண்டை எலும்பு நொறுங்கி மூளையை அழுத்திக் கொண்டுள்ளதால் அதை சரி செய்ய அவருக்கு இன்று அறுவை சிகிச்சை நடக்கிறது.

முதல்வர் அறை சூறை-போலீசில் புகார்

இதற்கிடையே டாக்டர் அம்பேத்கார் அரசு சட்டக் கல்லூரியின் முதல்வரின் அறையை மாணவர்கள் சூறையாடியது தொடர்பாக போலீசில் புகார் தரப்பட்டுள்ளது.

சுமார் 20 மாணவர்கள் முதல்வர் அறைக்குள் நுழைந்து போன், பேக்ஸ், மின் விசிறி, டேபிள், சேர்கள், கம்ப்யூட்டர் ஆகியவற்றை அடித்து நொறுக்கினர்.

ஜன்னல் கண்ணாடிகளும் அடித்து சேதப்படுத்தப்பட்டன. இதுகுறித்து கல்லூரியின் மேலாளர் எஸ்பிளனேடு போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

காயமடைந்த மாணவர்களுடன் சேதுராமன் சந்திப்பு:

இதற்கிடையே சென்னை சட்டக் கல்லூரியில் நடந்த தாக்குதலில் படுகாயமடைந்த மாணவர்களை அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்தின் நிறுவன தலைவர் சேதுராமன், அகில இந்திய தேவர் பேரவை இணை பொதுச் செயலாளர் எம்.ஆர்.லிங்கம் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+