இளம்பெண்கள் மாயம்-வீடுகளில் கருப்பு கொடி

Subscribe to Oneindia Tamil

உடன்குடி: இரு இளம் பெண்கள் காணமல் போன நிலையில் அவர்களை கண்டுபிடிக்க போலீசார் உரிய கவனம் செலுத்தாததைக் கண்டித்து தூத்துக்குடி அருகே வீடுகளில் கருப்புக் கொடிகளை ஏற்றி கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

உடன்குடியை அடுத்த நைனார்பத்தை சேர்ந்தவர் கோபால் நடேசன். இவர் திருச்செந்தூர் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மகள்கள் புவனேஸ்வரி, ஐஸ்வர்யா ஆகியோரை கடந்த 4ம் தேதி முதல் காணவில்லை.

இதுகுறித்து கோபால் நடேசன் மெஞ்ஞானபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் புவனேஸ்வரி மற்றும் ஐஸ்வர்யாவின் டைரிகளில் இன்னொரு மத வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதனால் இவர்கள் வீட்டை விட்டு ஓடி மதம் மாறியிருப்பார்களோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, இந்த வழக்கில் போலீசார் மந்தமாக செயல்படுவதாகக் கூறியும், மாணவிகளை கடத்தியவர்களை உடனே கண்டுபிடிக்க வேண்டும் என்று கோரியும் நயினார்பத்து கிராமத்தில் வீடுகள், மின் கம்பங்கள், டெலிபோன் கம்பங்களில் கருப்பு கொடிகள் ஏற்றப்பட்டன.

தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து, அந்தப் பெண்களை கண்டுபிடிக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து கருப்புக் கொடிகளை அகற்றினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+