இளம்பெண்கள் மாயம்-வீடுகளில் கருப்பு கொடி
உடன்குடி: இரு இளம் பெண்கள் காணமல் போன நிலையில் அவர்களை கண்டுபிடிக்க போலீசார் உரிய கவனம் செலுத்தாததைக் கண்டித்து தூத்துக்குடி அருகே வீடுகளில் கருப்புக் கொடிகளை ஏற்றி கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
உடன்குடியை அடுத்த நைனார்பத்தை சேர்ந்தவர் கோபால் நடேசன். இவர் திருச்செந்தூர் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மகள்கள் புவனேஸ்வரி, ஐஸ்வர்யா ஆகியோரை கடந்த 4ம் தேதி முதல் காணவில்லை.
இதுகுறித்து கோபால் நடேசன் மெஞ்ஞானபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் புவனேஸ்வரி மற்றும் ஐஸ்வர்யாவின் டைரிகளில் இன்னொரு மத வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதனால் இவர்கள் வீட்டை விட்டு ஓடி மதம் மாறியிருப்பார்களோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, இந்த வழக்கில் போலீசார் மந்தமாக செயல்படுவதாகக் கூறியும், மாணவிகளை கடத்தியவர்களை உடனே கண்டுபிடிக்க வேண்டும் என்று கோரியும் நயினார்பத்து கிராமத்தில் வீடுகள், மின் கம்பங்கள், டெலிபோன் கம்பங்களில் கருப்பு கொடிகள் ஏற்றப்பட்டன.
தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து, அந்தப் பெண்களை கண்டுபிடிக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து கருப்புக் கொடிகளை அகற்றினர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications