சுனாமி பீதியை பரப்பிய எஸ்எம்எஸ்
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தூத்துக்குடியில் திடீரென பரவிய எஸ்.எம்.எஸ்சால் பொது மக்களிடையே சுனாமி பீதி ஏற்பட்டது.
புயல் சின்னம் வலுவடைந்ததையடுத்து தமிழகம் முழுவதும் கடல் சீற்றம் மிக அதிகமாக உள்ளது. இந் நிலையில் தமிழகத்தை 15ம் தேதி (இன்று) மீண்டும் சுனாமி பேரலை தாக்கக்கூடும் என்றும் குறிப்பாக சென்னை, ராமநாதபுரம், தூத்துக்குடி போன்ற இடங்களில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் எஸ்எம்எஸ் புரளி பரவியது.
சுனாமி பேரழிவிலிருந்து தப்பிக்க அனைவரும் இறைவனை பிரார்த்திக்க வேண்டும் என்றும் அந்த எஸ்எம்எஸ் சொன்னது.
கடந்த 4 நாட்களாக இந்த எஸ்எம்எஸ் பரவியதால் மக்களிடையே அச்சமும், பீதியும் பரவியது. இந்த புரளியைப் பரப்பிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications