3 குழந்தைகளை எரித்து தாயும் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே 3 குழந்தைகளை எரித்துக் கொன்று விட்டு, தாயும் தற்கொலை செய்து கொண்டார்.

நேற்று இரவு நடந்த இந்த துயர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கத்தை சேர்ந்த மனோகரனின் மனைவி பொற்கொடி (28). இவர்களது குழந்தைகள் சந்தோஷ் ( 3), டெய்சிராணி (2), தயாநிதி (6 மாத குழந்தை).

மனோகரன் மளிகை கடை நடத்தி வருகிறார். மனோகரனுக்கும் இன்னொரு பெண்ணுக்கும் கள்ளத் தொடர்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதை பொற்கொடி கண்டித்ததால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

இந் நிலையில் மனோகரன் வெளியே கிளம்பினார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படவே பொற்கொடியை திட்டிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றார் மனேகாரன்.

இதனால் மனமுடைந்து பொற்கொடி தனது 3 குழந்தைகள் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துவிட்டு தானும் தீயில் எரிந்தார். இதில் அவர்களது குடிசை வீடும் பற்றி எரிந்தது.

இதில் நால்வருமே பலியாயினர்.

தற்கொலைக்கு துண்டியதாக மனோகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+