லக்னோவில் நாட்டு வெடிகுண்டு வெடித்து 2 சிறுமிகள் காயம்
Subscribe to Oneindia Tamil
லக்னோ: உ.பி. தலைநகர் லக்னோவில் இன்று காலை நடந்த நாட்டு வெடிகுண்டுவெடிப்பில் 2 சிறுமிகள் காயமடைந்தனர்.
அய்ஸா பாக் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்தது. காயமடைந்த இரு சிறுமிகளும் பேப்பர் பொறுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, குப்பையைக் கிளறியபோது குண்டு வெடித்தது.
லக்னோவில்கடந்த 2 நாட்களில் நடந்துள்ள 3வது குண்டுவெடிப்பு இது என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 2 நாட்களுக்கு முன்பு கீழ் நீதிமன்றம் ஒன்றின் வளாகத்தில் இரு குண்டுகள் வெடித்தன.
இது விஷமிகளின் கைவரிசையாக இருக்கும் எனவும், தீவிரவாதிகளின் சதியாக இருக்க வாய்ப்பில்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications