அரசு மருத்துவமனையில் வீசப்பட்ட குழந்தை - பரிதாப சாவு
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லை அரசு மருத்துவமனை வளாகத்தில் பிறந்து ஒரு நாளே ஆன, இறந்த நிலையில் கிடந்த ஆண் குழந்தை கண்டெடுக்கப்பட்டது.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய பெரிய மருத்துவமனையாக பாளை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளது.
இந்நிலையில் அரசு மருத்துவமனை பிரவச வார்டு அருகே ஆண் குழந்தை ஒன்று இறந்து கிடந்ததை அங்குள்ளவர்கள் பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே புறக்காவல் நிலைய போலீசார் வந்து குழந்தையின் உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அந்த குழந்தை பிறந்து ஒருநாள்தான் ஆகியிருக்கும் என்று தெரிகிறது. தொப்புள் கொடி கூட அறுக்காமல் அதை வீசிச் சென்றவர் யார் என்ற விவரம் தெரியவில்லை.
அரசு மருத்துவமனையில் தொடர்ந்து நடந்து வரும் குழந்தை வீச்சு சம்பவங்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications