ஆலங்குளத்தில் பள்ளிக்கூட மாணவர்கள் மோதல்

Subscribe to Oneindia Tamil

ஆலங்குளம்: நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே பளளிக்கூட மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டு இரு தரப்பினரும் அடித்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆலங்குளம் அருகே நல்லூரில் மேற்கு திருநெல்வேலி மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பிளஸ் டூ படிக்கும் மாணவர்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்று சனிக்கிழமை மதியம் வரை பள்ளி இயங்கியது. இந்நிலையில் காலையிலேயே மாணவர்களிடையே லேசான சலசலப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மதியம் இரு கோஷ்டி மாணவர்களும் பயங்கரமாக மோதிக் கொண்டனர்.

இதில் ஆலங்குளம் அம்பை ரோட்டை சேர்ந்த சின்னமணி மகன் ராஜா என்ற மாணவருக்கு காயம் ஏற்பட்டது.

இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்சன் சாமிதாஸ், மற்றும் ஆசிரியர்கள் தலையிட்டதால் மாணவர்கள் கலைந்து சென்றனர்.

டிஎஸ்பி கிங்ஸ்லின், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சண்முகம், தாசில்தார் காமாட்சி கணேசன் ஆகியோர் பள்ளிக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+