4 வயது சிறுமி உயிருடன் எரித்து கொலை: தாய்-கள்ளக் காதலன் கைது
சென்னை: கள்ளக் காதலுக்கு தடையாக இருந்த 4 வயது பெண் குழந்தை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்டது. இது தொடர்பாக குழந்தையின் தாய் மற்றும் கள்ளக் காதலனை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலையில் வசிப்பவர் அமுதா (26). இவரது மகள் தனம் (4).
ராஜா அண்ணாமலைபுரம் கேசவப் பெருமாள்புரத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் முருகேசன் (36) நேற்றிரவு 11 மணிக்கு அமுதாவிடம் வந்தார். இருவரும் ஆட்டோவில் உல்லாசமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது திடீரென சிறுமி தனம் உடலில் தீப்பிடித்த நிலையில் அலறியபடி தேனாம்பேட்டை எல்டாம் சாலையில் ஓடி வந்தது. இதைப் பார்த்த பிளாட்பாரவாசிகள் குழந்தையை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு தனத்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தை இன்று பரிதாபமாக உயிரிழந்தது.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது ஆட்டோ டிரைவர் முருகேசன் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறியுள்ளார். முருகேசனும், அமுதாவும் உல்லாசமாக இருந்தபோது இடையூறாக இருந்த குழந்தை தனத்தை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ய முயன்றிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இதையடுத்து முருகேசனையும், அமுதாவையும் போலீசார் கைது செய்துள்ளனர். சாலையில் குழந்தை உடலில் தீப் பிடித்த நிலையில் ஓடி பலியானது அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications