குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தில் ஆசிரியர் கைது
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லை மாவட்டத்தில், மனைவி மற்றும் குழந்தைகளை தாக்கிய ஆசிரியர் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
பாளை நெல்லை நயினார் தெருவை சேர்ந்தவர் பால் கதிரவன். பாளையிலுள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி நிகிலா. இவர்களுக்கு குழந்தைகள் உள்ளனர்.
கதிரவன் அடிக்கடி வீட்டில் தகராறு செய்து மனைவி மற்றும் குழந்தைகளை தாக்கி கொடுமைபடுத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நிகிலா மற்றும் குழந்தைகளை கதிரவன் சராமரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
இதில் காயமடைந்த நிகிலா நெல்லை மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து அவர் போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து ஆசிரியர் பால்கதிரவனை குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து பாளை சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications