மாலேகான் குண்டு: நாசிக் கொண்டு செல்லப்பட்ட புரோஹித்

மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக இந்து தீவிரவாத பெண் துறவி பிரக்யா சிங் தாக்கூர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் புரோஹித்தும் ஒருவர்.
இவரை கைது செய்த மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார், விசாரணைக்காக மும்பை கொண்டு வந்திருந்தனர். போலீஸ் காவல் மற்றும் சிறைக் காவல் முடிவடைந்ததைத் தொடர்ந்து அவர் நாசிக் கொண்டு செல்லப்பட்டார்.
அவரை அங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலை நீட்டிக்க போலீஸார் கோரவுள்ளனர்.
முதலில் இன்று காலை புரோஹித்தை கிங் எட்வர்ட் நினைவு மருத்துவமனைக்கு போலீஸார் கொண்டு சென்று மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டனர்.
நவம்பர் 5ம் தேதி புரோஹித் கைது செய்யப்பட்டார். மாலேகான் குண்டுவெடி்ப்பு தவிர சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு வழக்கிலும் இவரது பெயர் அடிபடுகிறது. பகவான் என்பவருக்கு 60 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடிபொருளை இவர் கொடுத்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
பகவான் மூலம் தீவிரவாதிகளுக்கு வெடிபொருள் கை மாறியதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. பகவான் யார் என்பது குறித்தும், அவரைப் பிடிப்பது குறித்தும் போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வழக்கில் இதுவரை பிரக்யா சிங் தாக்கூர், மேஜர் ரமேஷ் உபாத்யாய், சுவாமி அமிர்தானந்த் என்கிற தயானந்த பாண்டே, சமீர் குல்கர்னி, ஜெகதீஷ் மாத்ரே, ராகேஷ் தாவ்டே, அஜய் ரஹீர்கர், ஷாம்லால் பவர் சாஹு, சிவநாராயன் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக












Click it and Unblock the Notifications