'குண்டாஸ்'-காடுவெட்டி குரு மனு தள்ளுபடி
Subscribe to Oneindia Tamil
சென்னை: தன்னை குண்டர் சட்டத்தில் கைது செய்தது செல்லாது என்று உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வன்னியர் சங்கத் தலைவரும் பாமக முன்னணித் தலைவருமான காடுவெட்டி குரு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.
முதலில் ஒரு மிரட்டல் வழக்கில் கைது செய்யப்பட்டார் குரு. பின்னர் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய அரியலூர் மாவட்ட கலெக்டர் பரிந்துரை செய்ததையடுத்து அந்த சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டார்.
இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் குரு தாக்கல் செய்த மனு நீதிபதி எல்பி தர்ம ராவ், நீதிபதி தமிழ்வாணன் ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது குருவின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், முழுமையாக ஆய்வு செய்து தான் மாவட்ட கலெக்டர் இந்த உத்தரவைப் பிறப்பித்தள்ளார். இதனால் இதில் நீதிமன்றம் தலையிட வேண்டிய அவசியமே எழவில்லை என்று கூறிவிட்டனர்.












Click it and Unblock the Notifications