போர் நிறுத்தம்: இன்று வி. சிறுத்தைகள் மாணவர் அணி பேரணி
Subscribe to Oneindia Tamil
சென்னை: இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தததை அமல்படுத்த இலங்கை அரசை, மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாணவர் அணி சார்பில் இன்று சென்னையில் பேரணி நடைபெறுகிறது.
மன்றோ சிலையில் இருந்து சேப்பாக்கம் அரசு விருந்தினர் இல்லம் வரை பேரணி நடத்தப்படுகிறது.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
இன்று பகல் 2 மணியளவில் சென்னை மன்றோ சிலையில் இருந்து சேப்பாக்கம் அரசு விருந்தினர் இல்லம் வரை இந்த பேரணி நடைபெறுகிறது.
பேரணியை கி.வீரமணி தொடங்கி வைக்கிறார். டாக்டர் ராமதாஸ் பேரணியை முடித்து வைக்கிறார். தொல்.திருமாவளவன் உரையாற்றுகிறார்.
பேரணிக்கு முற்போக்கு மாணவர் கழகத்தின் மாநில செயலாளர் பா.இரவிச்சந்திரன் தலைமை தாங்குகிறார்.












Click it and Unblock the Notifications