அன்னிய முதலீடு-3வது இடத்தில் தமிழகம்
மும்பை: தொழில் துறையில் அன்னிய முதலீடுகளை இழுப்பதில் மகாராஷ்டிரம், டெல்லிக்கு அடுத்தபடியாக நாட்டிலேயே 3வது இடத்தில் தமிழகம் உள்ளது.
உலகமயமாக்கம் குறித்து ஆய்வு செய்யும் சர்வதேச அமைப்பான ஏ.டி. கேர்னி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உலகிலேயே அதிக அளவில் அன்னிய நேரடி முதலீடு செய்யப்படும் நாடுகளில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது.
இந்தியாவில் இந்த நிதியாண்டின் முதல் 4 மாதங்களில் மகாராஷ்டிரம் தான் அன்னிய முதலீடுகளை அதிக அளவி்ல் ஈர்த்துள்ளது. சுமார் 4.3 பில்லியன் டாலர் அளவுக்கு அந்த மாநிலத்தில் வெளிநாட்டு நிதி குவிந்துள்ளது.
அதற்கு அடுத்த நிலையில் டெல்லி உள்ளது. அங்கு 1.6 பில்லியன் டாலர் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் தொழில்துறையில் 1.02 பில்லியன் டாலர்கள் அன்னிய நேரடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகம் 4ம் இடத்திலும், எப்போதும் முதல் இரு இடங்களில் இருக்கும் குஜராத் 5வது இடத்துக்கும் தள்ளப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications