ஹர்த்தாலுக்குப் பதில் மறியல் போராட்டம்: தா.பாண்டியன்

சில நாட்களுக்கு முன்பு தா.பாண்டியன் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் 25ம் தேதி இலங்கையில் போர் நிறுத்தம் அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி ஹர்த்தால் நடத்தப்படும் என தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது ஹர்த்தால், மறியல் போராட்டமாக மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து தா.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 17.11.2008 அன்று நடந்த சர்வ கட்சிக் கூட்டத்தில், இலங்கையில் நடந்து வரும் போரை நிறுத்தக் கோரி, 25ம் தேதி தமிழகத்தில் முழு வேலைநிறுத்தம் செய்வது என எடுக்கப்பட்ட முடிவு குறித்து, இலங்கைப் போரினால் இலங்கை தமிழ் மக்கள் கொல்லப்படுவதை தடுக்க வேண்டும் என்பதில், ஒத்த கருத்துள்ள கட்சிகள், அமைப்புகள் இடையே சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால், முழு கடையடைப்பு மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்று சில கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.
தமிழக மக்களின் குரல் உறுதியோடு ஒருமித்த குரலாக ஒலிக்க வேண்டும் என்பதால் போராட்ட முறையை மாற்றிட கலந்து ஆலோசிக்கப்பட்டது. அரசியல் கட்சிகள், அமைப்புகளின் வேண்டுகோளுக்கிணங்க முழு அடைப்பு என்து தவிர்க்கப்படுகிறது.
போர் நீடிப்பதால், கோரிக்கை பற்றி மத்திய அரசு தனது நிலையை தெளிவுபடுத்தக் கோரியும், 25ம் தேதி தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களின் முன்னர், இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும், இலங்கைத் தமிழர்கள் கொல்லப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று ஒரே கோரிக்கையை மட்டும் வலியுறுத்தி மறியல் போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்று மறியலில் ஈடுபடுவோர் இந்தக் கோரிக்கையைத் தவிர வேறு எந்த முழக்கத்தையும் எழுப்பிட வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.
கட்டுபாட்டுடனும், துக்கத்துடனும், இலங்கை தமிழ் மக்களை காப்பாற்றும் உயரிய பொறுப்புணர்வுடன் தமிழக மக்கள் அனைவரும் போராட்டத்தில் பங்கேற்க அறை கூவி அழைக்கிறோம் என்று கூறியுள்ளார்.
-
RTE admissions: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! ஆர்டிஇ சேர்க்கை எப்போது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? -
கொளுத்தும் வெயில்.. தமிழ்நாட்டில் நடத்த 2 முக்கிய விஷயம்..!! -
இந்தி மாநிலங்களுக்கு போகும் "ரியல்" பவர்? 816ஆக உயரும் தொகுதிகள்.. மறுசீரமைப்பில் என்ன நடக்கும் -
ஓசூர், சேலம், சென்னை.. 24 மணிநேரத்தில் 3000 கோடியில் 3 மெகா முதலீடுகள்.. தேர்தல் நேரத்திலும் மாஸ்! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு












Click it and Unblock the Notifications