பஸ்களை தாக்குவோரை கண்டதும் சுட உத்தரவு
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரையில் அரசு பேருந்துகளை சேதப்படுத்துவோரை கண்டதும் சுட காவல்துறை ஆணையர் கே.நந்தபாலன் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து மதுரை போலீஸ் கமிஷனர் கே.நந்தபாலன் கூறுகையில், மதுரை நகரில் அரசுக்கு சொந்தமான பேருந்துகள் தொடர்ந்து தேசப்படுத்தப்பட்டு வருகிறது. இது சட்ட விரோத செயல். இதுவரை பேருந்துகளை சேதப்படுத்திய 12 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மீது கல் வீசி தாக்குவோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவர்.
தேவைப்பட்டால் அவர்கள் மீது துப்பாக்கி சூடும் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மீது கல் வீசி தாக்கியதாக கைது செய்யப்பட்ட 12 பேர் மீது குண்டர் தடுப்புக் காவலில் அடைக்கலாமா என்றும் பரிசீலித்து வருகின்றோம் என்றார்.












Click it and Unblock the Notifications