சோமாலிய கொள்ளையர் படகை மூழ்கடித்த இந்திய கடற்படை

இதையடு்த்து கடற்படை திருப்பித் தாக்கியதி்ல் கொள்ளையர்களின் ஒரு படகு வெடித்துச் சிதறியது. இன்னொரு படகில் இருந்த கொள்ளையர்கள் அதை அநாதையாகவிட்டுவிட்டு கடலில் குதித்து கரை சேர்ந்து தப்பிவிட்டனர்.
சட்டம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் அளவுக்கு சோமாலியாவில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் இல்லாமல் போய் விட்டது. ஆளாளுக்கு துப்பாக்கியும், கையுமாக திரிந்து கொண்டிருக்கிறார்கள்.
அங்கு இருக்கும் பல ஆயுதம் தாங்கிய கும்பல்கள் இப்போது கடலில் அட்டகாசம் புரியத் தொடங்கியுள்ளன. கடற் கொள்ளையர்களாக மாறி இவர்கள் அடுத்தடுத்து கப்பல்களைக் கடத்தி வருகின்றனர்.
ஏடன் வளைகுடா பகுதியில் வரும் கப்பல்களைப் பிடித்து வைத்துக் கொண்டு பெரும் பணம் கேட்டு மிரட்டி வருகின்றனர்.
இதையடுத்து இந்தியக் கப்பல்களுக்கு பாதுகாப்பாக அங்கு இந்திய கடற்படைக் கப்பலான ஐஎன்எஸ் தாபர் ரோந்து சுற்றி வருகிறது.
செளதி அரேபியாவின் அராம்கோ நிறுவனத்துக்கு சொந்தமான உலகிலேயே மிகப் பெரிய எண்ணெய் கப்பலான சிரியஸ் ஸ்டாரை கடத்திய கொள்ளையர்கள் நேற்று தாபர் கப்பலை சூழ்ந்தனர்.
இரண்டு படகுகளில் வந்த கொள்ளையர்கள் அதை ராக்கெட்களை வீசி சிதைக்கப் போவதாக மிரட்டியதோடு துப்பாக்கிச் சூடும் நடத்தினர். சில கொள்ளையர்கள் கப்பலுக்குள்ளும் ஏற முயன்றனர்.
இதையடுத்து கடற்படையினர் அந்த படகுகளை நோக்கி பதில் தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு படகு வெடித்துச் சிதறி மூழ்கியது. இதைத் தொடர்ந்து இன்னொரு படகிலிருந்த கொள்ளையர்கள் அதிலிருந்து குதித்து தப்பிவிட்டனர்.
முறையான அரசு ஏதும் இல்லாத சோமாலிய நாட்டின் கடற் கொள்ளையர்கள் இப்போது 17 கப்பல்களைப் பிடித்து வைத்துள்ளனர். 339 கப்பல் ஊழியர்களும் இவர்களின் பிடியில் சிக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த நவம்பர் 2ம் தேதி முதல் ஐஎன்எஸ் தாபர் இந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏடன் வளைகுடா பகுதியில் இதுவரை 35 கப்பல்களை பாதுகாப்பாக கொள்ளையர்களிடம் சிக்காமல் பத்திரமாக அனுப்பி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால், ஒரே ஒரு கப்பலால் இந்தப் பிராந்தியம் முழுவதையும் கண்காணிப்பது சாத்தியமில்லை என்பதால் இதையும் தாண்டி கடத்தல்கள் தொடர்ந்து கொண்டுள்ளன.












Click it and Unblock the Notifications