சட்டக் கல்லூரி மாணவர்கள் டிஸ்மிஸ் கோரி 'டிராபிக்' ராமசாமி வழக்கு
சென்னை: சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் மோதலில் ஈடுபட்ட மாணவர்களை டிஸ்மிஸ் செய்யக் கோரி சென்னை பொது நல சேவகர் டிராபிக் ராமசாமி உயர்நீதிமன்றத்தில் பொது நலன் மனுவைத் தாக்கல் செய்துள்ளார். சிபிஐ விசாரணைக்கும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக ராமசாமி தாக்கல் செய்துள்ள பொது நலன் மனுவில், கடந்த 12-ந் தேதி சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கார் அரசு சட்டக்கல்லூரியில் மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. வன்முறை தாக்குதல் காரணமாக 4 மாணவர்கள் காயம் அடைந்தனர். சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் கைது செய்து வருகிறார்கள்.
வீடியோ காட்சிகள் மூலம் வன்முறையில் ஈடுபட்ட மாணவர்கள் யார் என்பதை கண்டறிய பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும்.
இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினேன். வன்முறையில் ஈடுபட்ட மாணவர்களை கண்டறிந்து, அந்த மாணவர்களை கல்லூரியிலிருந்து டிஸ்மிஸ்' செய்ய வேண்டும். இதன்மூலம் மற்ற கல்லூரி மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்.
சம்பவத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த போலீஸ் அதிகாரிகளையும், கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர்களையும் பதவியிலிருந்து டிஸ்மிஸ்' செய்யவேண்டும். இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.












Click it and Unblock the Notifications