நர்ஸ் குளிப்பதை செல்போனில் படமாக்கிய ஆசிரியர் கைது
சென்னை: சென்னை சேத்துப்பட்டில் நடந்த பயிற்சி முகாமுக்கு வந்த பெரம்பலூர் நர்ஸ் குளிப்பதை தனது செல்போனில் படம் பிடித்த கல்லூரி ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
பெரம்பலூரை சேர்ந்தவர் ஷீலா. 28 வயதாகும் இவர் பெரம்பலூரில் உள்ள ஆரம்ப சுகாதார மையம் ஒன்றில் நர்ஸாகப் பணியாற்றுகிறார்.
சென்னை சேத்துப்பட்டில் உள்ள உலக பல்கலைக்கழக சேவை மையத்தில் 3 நாள் விசேஷ பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமில் ஷீலாவும் கலந்து கொண்டார்.
இந்தப் பயிற்சி முகாமுக்கு வேலூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த பிரேம்குமார் (40) என்ற கல்லூரி ஆசிரியரும் வந்திருந்தார்.
நேற்று முன்தினம் குளியல்அறையில் தான் குளித்துக் கொண்டிருக்கும்போது, அதை ஆசிரியர் பிரேம்குமார் செல்போனில் படம் பிடித்தார் என்று ஷீலா, சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து போலீஸார் விசாரணை நடத்தினர். பின்னர்
பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவு 4-ன் கீழ் பிரேம்குமார் மீது குற்றம் சுமத்தப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார்.
கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் 15 நாள் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications