உயர்நீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்த கலெக்டர்!
மதுரை : டி.என்.பிஎஸ்.சி., ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் ஜாதி சான்றிதழை சரி பார்த்து அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டதற்கு மதுரையில் உள்ள உயர் நீதி மன்ற கிளையில் தஞ்சை மாவட்ட கலெக்டர் சண்முகம் வருத்தம் தெரிவித்தார்.
தஞ்சை ஜெபமாலைபுரத்தைச் சேர்ந்தவர் கயல்விழி. இவர் மதுரை உயர் நீதி மன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
நாங்கள் குடும்பத்தோடும் கிறிஸ்துவ மதத்திலிருந்து 1998 ஜூலை 12ல் இருந்து இந்து மத்திற்கு மாறினோம்.
எனக்கு தஞ்சை தாசில்தார் 2000 மே 30 ல் ஆதிதிராவிடர் என ஜாதி சான்றிதழ் வழங்கினார்.
இந்த நிலையில் டி.என்.பிஎஸ்.சி. நடத்திய தலைமை செயலக உதவியாளர் மற்றும் தனி எழுத்தர் பதவிக்கான தேர்வு, விஏஓ தேர்வு, சார்நிலை பணியாளர் தேர்வில் வெற்றி பெற்றேன்.
எனது சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழக்கப்பட்டேன். அப்போது என் பதிவு எண் முடிவு நிறுத்தி வைக்கப்பட்ட பட்டியலில் இடம் பெற்றிருந்தது.
காரணம் ஜாதி சான்றிதழ் சரிபார்ப்புக்கு தஞ்சை மாவட்ட கலெக்டருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
மேலும் கலெக்டரின் பதில் வந்த பிறகே நியமன உத்தரவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனால் எனக்கு கடந்த ஒரு வருடம் சம்பாதிக்கும் வாய்ப்பு பறிபோய் உள்ளது.
என்னுடன் தேர்வு எழுதி வேலைக்கு சேந்தவர்களின் பணி மூப்பு அடிப்படையில் எனக்கு பணி வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதே போன்று சந்திரகேகர் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த இரண்டு மனுக்கள் மீதும் விசாரணை நடத்தி அக்டோபர் 14 ம் தேதிக்குள் பதில் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் அந்த உத்தரவு அமுல்படுத்தப்படவில்லை.
இதனால் தஞ்சை மாவட்ட கலெக்டர் சண்முகம் நீதி மன்றத்தில் நேரில் ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து தஞ்சை மாவட்ட கலெக்டர் சண்முகம், நீதிபதிகள் ரவிராஜ பாண்டியன், ஜனார்த்தன ராஜா ஆகியோர் முன்பு நேரில் ஆஜரானார்.
அப்போது ஜாதி சான்றிதழ் சரிபார்பு பணி தாமதம் ஏற்பட்டதற்கு வருத்தம் தெரிவித்தார். எதிர்காலத்தில் இது போன்ற தவறுகள் ஏற்படாது என்று உறுதி கூறினார்.
இதனையடுத்து நீதிபதிகள் இந்த மனு மீதான விசாரணையை தள்ளி வைத்தனர்.
-
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க












Click it and Unblock the Notifications