நரேந்திர மோடி கூட்டத்திற்கு டெல்லி போலீஸ் தடை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின், தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்திற்கு டெல்லி போலீஸார் அனுமதி வழங்க மறுத்து விட்டனர்.
டெல்லி மாநில சட்டசபைக்கு வரும் 29ம் தேதி, தேர்தல் நடக்கிறது. இங்கு பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
பிரசாரத்தின் ஒரு கட்டமாக நேற்று நேதாஜி நகர் மற்றும் பஞ்ச்குய்யா ரோடு பகுதிகளில் நடந்த பொதுக்கூட்டங்களில் மோடி பங்கேற்பதாக இருந்தது. ஆனால், இந்தக் கூட்டங்களில் பங்கேற்க மோடி அனுமதி பெறவில்லை எனக் கூறி, அவரை அங்கு பேசக்கூடாது என, போலீசார் தெரிவித்து விட்டனர்.
இதையடுத்து, அந்த இரு இடங்களிலும் நடக்க இருந்த தேர்தல் பொதுக் கூட்டம், சாலையோர பிரசாரக் கூட்டமாக (ரோட் ஷோ) மாற்றப்பட்டது.












Click it and Unblock the Notifications