நெருக்கும் ராணுவம்-இறுக்கத்தில் புலிகள்!
கொழும்பு: மாவீரர் தின உரைக்கு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில், புலிகளின் முக்கியப் பகுதியான ஒலமடுவை பிடித்துள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது. கிளிநொச்சியை ராணுவம் நெருக்கத் தொடங்கியிருப்பதால் புலிகள் தரப்பில் இறுக்கமான நிலை காணப்படுகிறது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முக்கியப் பகுதிதான ஒலமடு. விடுதலைப் புலிகள் அமைப்பின் மிக முக்கியப் பகுதியாகும் இது. ஒலமடுவைப் பிடித்தால், மாங்குளம்-முல்லைத்தீவு சாலையை வெகு எளிதாக ராணுவம் பயன்படுத்த முடியும்.
அப்படி நடந்தால் முல்லைத்தீவு ராணுவத்தின் தீவிர நேரடிக் கண்காணிப்பின் கீழ் வரும் வாய்ப்பு உண்டு. முல்லைத்தீவில்தான் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் ரகசிய பதுங்குமிடம் இருப்பதால் ஒலமடுவைப் பிடித்திருப்பதாக ராணுவம் கூறியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
இதுகுறித்து பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 3வது அதிரடிப்படை வீரர்கள், ஒலமடுவை எளிதில் அடைந்து விட்டனர். அங்கு முக்கிய பகுதிகளை தங்களது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர்.
எந்த சவாலையும் சந்திக்கும் வகையில், இலங்கை வீரர்கள் உள்ளனர். தொடர்ந்து அவர்கள் முன்னேறி வருகின்றனர்.
தற்போது மழை விட்டு விட்டதால், வீர்ரகள் வேகமாக முன்னேறி வருகின்றனர். அவர்களுக்குத் தேவையான உணவு, மருந்து, குடிநீர் ஆகியவை போதுமான அளவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
ராணுவத்தின் 57வது பிரிவின் முதலாவது அதிரடிப்படை வீரர்கள், கிளிநொச்சியின் புறநகர்ப் பகுதிகளைக் கைப்பற்றி வருகிறார்கள்.
முக்கிய புலிகள் தலைவர் பலி?:
இதற்கிடையே, சமீபத்திய மோதல் ஒன்றில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான லெப்டினென்ட் கர்னல் ஸ்டான்லி கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
புலிகளின் ரேடியோ பேச்சை இடைமறித்துக் கேட்டபோது இந்தத் தகவல் தெரிய வந்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், மற்ற பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள தரைப்படை வீரர்களை, கிலாலி மற்று முகமலை பகுதிகளுக்கு விடுதலைப் புலிகள் திருப்பி விட்டு வருகின்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications