நக்ஸல்-மதுரை கல்லூரி மாணவர்கள் தொடர்பு: டிஜிபி
மும்பை: மும்பை தாஜ் ஹோட்டலில் இருந்த அனைவருமே பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுவிட்டதாக மகாராஷ்டிர போலீஸ் டிஜிபி ராய் கூறியுள்ளார்.
அதே நேரத்தில் அங்கு பதுங்கியுள்ள தீவிரவாதிகளைப் பிடிக்க ராணுவமும் தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோக்களும் தீவிர தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். அதே போல டிரைடண்ட் ஹோட்டலிலும் ராணுவமும் என்எஸ்ஜி படையினரும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
டிரைடண்ட் ஹோட்டலிலும் நரிமன் ஹவுஸ் ஹோட்டலிலும் தீவிரவாதிகளிடம் பிணயக் கைதிகள் சிக்கியுள்ள நிலையில் தாஜ் ஹோட்டலில் 3 தீவிரவாதிகளை கமாண்டோக்களும் போலீசாரும் சுட்டுக் கொன்றுவிட்டனர்.
மேலும் பிணயக் கைதிகளாக இருந்த அனைவருமே காப்பாற்றப்பட்டுவிட்டனர் என்றார் ராய்.
தாஜ் ஹோட்டலில் ஒவ்வாரு மாடியாக சென்று ஒவ்வொரு அறையாகச் சென்று ராணுவத்தினர் சோதனையிட்டு வருகின்றனர். தீவிரவாதிகள் பதுங்கியுள்ள அறைகளை உடைத்துத் தாக்கி வருகின்றனர்.
அங்கு இரு தரப்புக்கும் இடையே பயங்கர மோதல் நடந்து வருகிறது. தீவிரவாதிகள் கிரனைடுகளை வீசு துப்பாக்கியால் சுட்டு வரும் நிலையில் ராணுவம் சிறிய ரக குண்டுகளை வீசி துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது. அங்கு மாலை வரை தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது.
இந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு என்.எஸ்.ஜி. கமாண்டோ வீரர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. ஆனால், கமாண்டோக்கள் திருப்பி்ச் சுட்டதில் அங்கிருந்த தீவிரவாதிகள் 3 பேரும் கொல்லப்பட்டுவிட்டனர்.
முன்னதாக தீவிரவாதிகளின் கையெறி குண்டு வீச்சால் தாஜ் மஹால் ஹோட்டலின் 4வது மாடியில் தீப்பிடித்துக் கொண்டது. தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். நேற்றிரவு பிடித்த தீ இன்று காலை தான் அணைக்கக்கப்பட்டது.
நூற்றாண்டு பழமை வாய்ந்த தாஜ் மஹால் ஹோட்டலின் ஒரு பகுதி தீயில் கருகி விட்டது.
தீவிரவாதிகள் கொல்லப்பட்ட பி்ன்னர் ஹோட்டலில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பயணிகள் உள்ளிட்டோர் ராட்சத கிரேன்கள் மற்றும் ஏணிகள் மூலம் மாடிகளில் இருந்து ஜன்னல்கள் வழியாக மீட்கப்பட்டனர்.
படிகள் வழியே வந்தால் மறைந்திருக்கும் தீவிரவாதி யாராவது தாக்கலாம் என்ற அச்சத்தில் ஏணிகள் வழியே இறக்கப்பட்டனர்.
மேலும் ராணுவம் தவிர கடற்படை வீரர்கள், கமாண்டோப் படையினரும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் ராணுவத்தினரும் தீவிரவாதிகளும் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் ஹோட்டலின் 4வது மாடியில் ஒரு அறையில் இன்று மாலை மீண்டும் தீப் பிடித்துக் கொண்டது.
இந்த ஹோட்டலில் இறந்து கிடந்த பலரின் பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. இந்த 6 பேருமே வெளிநாட்டினர் ஆவர்.
தாஜ் ஹோட்டலின் பொது மேலாளர், அவரது மனைவி, 3 குழந்தைகளும் கொல்லப்பட்டுள்ளனர்.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications