காரைக்காலில் புயல் கரையை கடந்தது

முன்னதாக இந்தப் புயல் சி்ன்னம் வேதாரண்யம்-நாகப்பட்டினம் இடையே நேற்றே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நகரவில்லை. ஒரே இடத்தில் நிலை கொண்டது.
இந் நிலையில் இப்போது புயல் நாகப்பட்டிணம் கரையோரமாக நகர ஆரம்பித்தது. பின்னர் அது மேலும் வட மேற்காக நகர்ந்து காரைக்காலில் இன்று காலை கரையைக் கடந்தது.
அப்போது அந்தப் பகுதியில் மிக பலத்த மழையும் மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் அதி வேக புயல் காற்றும் வீசியது.
புயல் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. முன்னதாக நாகப்பட்டிணம், காரைக்கால் பகுதியில் கடலோரத்தில் வசிக்கும் சுமார் 40,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
புயலையொட்டி இன்றும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications