ஓபராயில் 6 பிணயக் கைதிகள் கொலை-2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

Subscribe to Oneindia Tamil

மும்பை: ஒபராய் ஹோட்டலில் கமாண்டோக்களால் சுற்றி வளைக்கப்பட்ட தீவிரவாதிகள் 6 பிணயக் கைதிகளை சுட்டு்க் கொன்றுவிட்டனர்.

அங்கு கமாண்டோக்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆனால், இதற்கு முன்பே 6 பணயக் கைதிகளை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுவிட்டனர்.

அங்கிருந்த சுமார் 30 பணயக் கைதிகள் என்.எஸ்.ஜி. கமாண்டோக்கள் பத்திரமாக மீட்டு வெளியேற்றிவிட்டனர். இதில் 3 பேர் வெளிநாட்டவர் ஆவர்.

முன்னதாக தீவிரவாதிகளை சரணடையுமாறு என்எஸ்ஜி வைத்த கோரிக்கையை அவர்கள் நிராகரித்துவிட்டனர். இதையடுத்தே என்எஸ்ஜி தாக்குதலை நடத்தியது.

இப்போது ஒபராய் ஹோட்டலின் ஒவ்வொரு அறையாக சோதனைகள் நடந்து வருகின்றன. அங்கு வேறு எந்தத் தீவிரவாதியும் இல்லை என்று என்எஸ்ஜி கூறியுள்ளது.

ஒபராய் இருந்து மீட்கப்பட்டவர்களில் காயமடைந்தவர்கள் பிரீச் கேண்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+