மும்பை தாக்குதல் எதிரொலி குமரியில் குறையும் வெளிநாட்டு பயணிகள்

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து கன்னியாகுமரியில் தங்கியிருக்கும் வெளிநாட்டுப் பயணிகள் தங்களது பயணத்தை முடித்துக் கொண்டு வேகம் வேகமாக கிளம்பிக் கொண்டிருக்கின்றனர்.

மும்பையில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில், வெளிநாட்டினர் மட்டும் 11 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் சுற்றுலா வந்துள்ள வெளிநாட்டு பயணிகளை பீதியடைய செய்துள்ளது.

தங்களது பயணங்களை ரத்து செய்துவிட்டு நாடுகளுக்கு திரும்ப துவங்கியுள்ளனர். கடந்த 2 நாட்களாக திருவனந்தபுரம், கன்னியாகுமரியிலும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைய துவங்கியுள்ளது.

பலர் தங்கள் அறைகளை காலி செய்துவிட்டு சொந்த நாட்டுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.

தமிழகம் வந்துள்ள அமெரிக்கா, மற்றும் பல நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

கன்னியாகுமரியில் தற்போது சீசன் களை கட்டியுள்ள நிலையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருகை தந்திருந்தனர். அவர்களில் பலரும் தங்களது பயணத்தை முடித்து விட்டு சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்ல துவங்கியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+