தமிழக கடலோரங்களில் தீவிர ரோந்து
நெல்லை: மும்பை தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி கடலோர பகுதிகளில் ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மும்பையில் தீவிரவாதிகளின் தாக்குதலை அடுத்து தமிழகத்தில் பாதுகாப்பை பலப்படுத்துமாறும் குறிப்பாக கடலோர மாவட்டங்களில் தனிக்கவனம் செலுத்துமாறும் மத்திய உளவு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து தென்மண்டல ஐஜி சஞ்சிவ் குமார் தென்மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை எவ்வாறு நவீன முறையில் செயல்படுத்துவது என போலீசார் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திட இன்று நெல்லை வந்தார்.
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் அவர் தலைமை வகித்து பேசுகையில், போலீசார் எந்த நேரத்திலும் தயார் நிலையில் இருந்திட வேண்டும். சிறப்பு அதிரடி படைகளை நவீன படுத்த வேண்டும். தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
சந்தேகப்படும் நபர்களை பிடித்து தீவிர விசாரணை நடத்துங்கள். எத்தகைய சூழ்நிலைகளையும் போலீசார் சமாளித்திட வேண்டும். சட்டம் ஓழுங்கு மற்றும் குற்றங்கள் நடைபெறாமல் போலீசார் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications