கடும் சட்டம் இல்லாவிட்டால் பெடரல் ஏஜென்சியால் பலனில்லை: பாஜக
டெல்லி: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு முன்வைத்துள்ள புதிய புலனாய்வு ஏஜென்சியை பாஜக எதிர்க்கவில்லை. ஆனால் கடுமையான தீவிரவாத தடுப்புச் சட்டம் இல்லாமல் இந்த ஏஜென்சியை அமைத்தால் அதனால் எந்தப் பயனும் இருக்காது என்று பாஜக பொதுச் செயலாளர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இதுபோன்ற ஏஜென்சி தேவை என்பதே பாஜகவின் எண்ணமும். இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரது கொலைச் சம்பவங்களின் போது அமைக்கப்பட்ட அதிரடிப் புலனாய்வுப் படைகளைப் போல இதையும் அமைக்கலாம்.
ஆனால் கடுமையான தீவிரவாத தடுப்புச் சட்ட் இல்லாமல் இந்த ஏஜென்சியை அமைத்தால் அதனால் எந்தப் பயனும் இருக்காது.
வலுவான அதிகாரம் இல்லாமல் இந்த ஏஜென்சி அமைந்தால் அதனால் யாருக்கும் பலன் இல்லை.
தற்போது உள்ள ஐபி, சிபிஐ மற்றும் ரா ஆகிய புலனாய்வு அமைப்புகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வருவதுதான் இந்த புதிய புலனாய்வு ஏஜென்சியின் நோக்கமாக இருக்கும் என கருதுகிறேன்.
தீவிரவாதம் குறித்து காங்கிரஸ் கட்சி மென்மையான நிலையை மேற்கொண்டுள்ளது. வாக்கு வங்கியை கருத்தில் கொண்டு இவ்வாறு அது செயல்படுகிறது. இந்த நிலையில், திடீரென அவர்கள் கடுமையான நிலையை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.
ஆனால் மும்பை முற்றுகையைத் தொடர்ந்து அவர்கள் தீவிரவாதத்திற்கு எதிராக கடுமையான நிலையை எடுக்க வேண்டியுள்ளது.
தற்போது மகாராஷ்டிராவில் உள்ள மகாராஷ்டிர திட்டமிட்ட குற்றத் தடுப்புச் சட்டம் சற்று கடுமையானது. அதில் உள்ள அனைத்து அதிகாரங்களையும் இந்த புலனாய்வு ஏஜென்சிக்கு வழங்க வேண்டும் என்றார் ஜேட்லி.












Click it and Unblock the Notifications