கருணாநிதி-அனைத்துக்கட்சி தலைவர்கள் டெல்லி பயணம்
சென்னை: இலங்கையில் போர் நிறுத்தத்தைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்க அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் முதல்வர் கருணாநிதி இன்று டெல்லி செல்கிறார்.
பிரதமருடன் நாளை இந்த சந்திப்பு நடக்கிறது. ஆனால், இதை அதிமுகவும் மதிமுகவும் புறக்கணிக்கின்றன.
நேற்று தமிழக திமுக, காங்கிரஸ், பாமக, போட்டி மதிமுக எம்பிக்கள் 34 பேர் டெல்லியில் அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தித்து இதே கோரிக்கையை வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் முதல்வர் கருணாநிதி இன்று மாலை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியுடன் டெல்லி செல்கிறார்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது கட்சியினருடன் இன்றே டெல்லி புறப்படுகிறார். அதே போல காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் சுதர்சனம், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ராதிகா உள்ளிட்டோரும் செல்கின்றனர்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் இவர்கள் சந்திப்பார்கள் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications