விமான நிலையங்களை தாக்குவோம்-டெக்கன் முஜாகிதீன்

சென்னை, பெங்களூர், டெல்லி விமான நிலையங்களைத் தாக்கப் போவதாகவும் விமானங்களைக் கடத்தப் போவதாகவும் மீண்டும் இ-மெயில் அனுப்பியுள்ளது. இந்த மெயில் செளதி அரேபியாவிலிருந்து அனுப்பப்பட்டுள்ளது.
இந்த மெயில் டெல்லி விமான நிலையத்துக்கு அனுப்பப்பட்டது.
மும்பையில் தாக்குதல் நடந்தவுடன் டெக்கன் முஜாகிதீன் என்ற அமைப்பிடமிருந்து ஒரு இமெயி்ல் வந்தது. அதில், இந்தத் தாக்குதலை நாங்கள் தான் நடத்தினோம் என இந்த அமைப்பு பொறுப்பேற்றது. இந்த மெயில் ரஷ்ய நாட்டு இணையத் தளத்திலிருந்து வந்தது. வாய்ஸ் ரெகக்னிஷன் சாப்ட்வேர் உதவியோடு இந்த மெயில் எழுதப்பட்டது தெரியவந்தது.
இந் நிலையில் அந்த அமைப்பிடமிருந்து செய்தி நிறுவனங்களுக்கு மீண்டும் ஒரு மெயில் வந்துள்ளது. அதில் டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினத்தையொட்டி டெல்லி, பெங்களூர், சென்னை விமான நிலையங்களைத் தாக்குவோம் என்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், முன்னதாகவே இந்தத் தாக்குதல் திட்டம் குறித்து ஐபி மோப்பம் பிடித்துவிட்டது. இதனால் கடந்த இரு தினங்களுக்கு முன்பே நாடு முழுவதும் விமான நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்குமாறு உத்தரவிட்டது.
டெக்கன் முஜாகிதீனின் பெயரில் லஷ்கர் தான் இந்தத் தாக்குதலை நடத்தியது என்கிறது ஐ.பி.
சென்னை விமான நிலையத்தில் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. லேடர் பாயிண்ட் செக்-அப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி விமானத்தில் ஏறும் முன்பும் பயணிகள் மீண்டும் ஒருமுறை சோதனைக்குள்ளாக்கப்படுகின்றனர்.
மேலும் என்எஸ்ஜி கமாண்டோக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இந்தப் படை பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு முக்கியமான விமான நிலையங்கள் அமைந்துள்ள நகர்களுக்கு ஏற்கனவே வந்திறங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.
சென்னை, பெங்களூர் விமான நிலையங்களில் 9 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தொழில்துறை பாதுகாப்புப் படையுடன் இணைந்து மாநில போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சென்னை விமான நிலையத்தை ஒட்டிய ஹோட்டல்களிலும் தீவிர பாதுகாப்பு போடப்பட்டு்ள்ளது.












Click it and Unblock the Notifications