தீவிரவாத தாக்குதல்: வெறிச்சோடிய சம்ஜாதா எக்ஸ்பிரஸ்
டெல்லி: மும்பை தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, ஏற்பட்ட பீதியின் காரணமாக பாகிஸ்தானிலிருந்து சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் இந்தியாவுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது.
நவம்பர் 26ம் தேதி நடந்த மும்பைத் தாக்குதலுக்குப் பின்னர் சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரயிலில், பாகிஸ்தான் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டதாக ரயில்வே தகவல்கள் தெரிவிக்கின்றன.
மொத்தம் 777 பேர் இந்த ரயிலில் பயணம் செய்யலாம். தினசரி 500 பேர் பாகிஸ்தானிலிருந்து வருவது வழக்கம். மும்பை தீவிரவாதத் தாக்குதல் நடந்த அடுத்த நாள் 334 பேர் பயணித்தனர்.
டிசம்பர் 2ம் தேதி இது 268 ஆகவும், 5ம் தேதி 250 ஆகவும் குறைந்து விட்டது.
அதேசமயம், இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் உள்ளதாம்.
நவம்பர் 26ம் தேதி 489 பேரும், 30ம் தேதி 518 பேரும், டிசம்பர் 3ம் தேதி 597 பேரும் பாகிஸ்தானுக்குச் சென்றனர்.












Click it and Unblock the Notifications