ஜம்மு காஷ்மீரில் 4வது கட்ட தேர்தல்- வாக்குப்பதிவு மந்தம்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நான்காவது கட்ட வாக்குப்பதிவு இன்று நடந்து முடிந்தது. காலையில் வேகமாக இருந்த வாக்குப்பதிவு போகப் போக மந்தமானது.
7 கட்டமாக ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு தேர்தல் நடக்கிறது. இன்று நான்காவது கட்ட வாக்குப்பதிவு 18 தொகுதிகளுக்கு நடந்தது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.
தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என தீவிரவாதிகள் விடுத்த எச்சரிக்கையை புறக்கணிக்கும் வகையில், வாக்காளர்கள் பெருமளவில் வாக்குகளைப் பதிவு செய்ததைக் காண முடிந்தது.
இருப்பினும் போகப் போக வாக்குப் பதிவு மந்தமடைந்தது.
வாக்குப்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் பாரமுல்லா மாவட்டம், சோப்பூர் - சங்க்ராமா சாலையில் தீவிரவாதிகள் கிரனேட் வெடிகுண்டை வெடிக்கச் செய்தனர். இருப்பினும் இதனால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications