குருவாயூர்: தமிழகத்தைச் சேர்ந்த 7 பேர் விபத்தில் பலி
கோவை: குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற பெண் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 7 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.
கோவை மாவட்டம் திருப்பூர் அருகே வாவிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்நாத் (34). தனியார் பனியன் ஏற்றுமதி கம்பெனியில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.
கோவை மாவட்டம் அனுப்பர் பாளையம் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார் உமா மகேஸ்வரி (30). பிரேம்நாத்தின் மனைவி இவர்.
இவர்களுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு மிதுல்ராம் என்ற ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை மிதுல்ராமுக்கு முதன் முதலில் சோறூட்டும் நிகழ்ச்சிக்கு செல்ல குலதெய்வமான கேரள மாநிலம் குருவாயூர் கோயிலுக்கு உமா மகேஸ்வரி, அவரது கணவர் பிரேம்நாத், 8 மாத கைக்குழந்தை மிதுல்ராம், தாய் துளசி, மாமியார் நளினி, தங்கைகள் பானுபிரியா, ரேவதி ஆகியோர் இன்று அதிகாலை 1 மணியளவில் ஒரு குவாலிஸ் காரில் திருப்பூரிலிருந்து புறப்பட்டனர்.
அப்போது திருச்சூரிலிருந்து சேலம் நோக்கி வந்த லாரி ஒன்று கஞ்சிக்கோடு என்ற இடத்தில் குவாலிஸ் கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் குவாலிஸ் கார் அப்பளம் போல் நொறுங்கியது.
காரில் பயணம் செய்த உமா மகேஸ்வரி, பிரேம்நாத், குழந்தை மிதுல்ராம், துளசி, நளினி, பானுபிரியா மற்றும் கார் டிரைவர் ஆகிய 7 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த ரேவதி என்பவரை மீட்டு சிகிச்சைக்காக பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து பாலக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர்கள் பழனிச்சாமி, மகேந்திரன், கிளீனர் பெருமாள் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
டெல்லியில் பயங்கரம்! முதலில் பேஸ்மென்ட்டில் வெளியேறிய கரும்புகை! அடுத்த சில நிமிடங்களில் 20 பேர் பலி -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications