வெள்ள நிவாரணப் பணிகளில் வேகம் - கலெக்டர்களுக்கு முதல்வர் உத்தரவு

மழை வெள்ள நிவாரண பணிகள் குறித்து 12 மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் கருணாநிதி ஆலோசனை நடத்தினார்.
வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் புயல் சின்னத்தைத் தொடர்ந்து இந்தக் கூட்டம் அவசரமாக கூட்டப்பட்டிருந்தது.
இந்த கூட்டத்தில் வெள்ள நிவாரண பணிகளுக்காக உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்ட அமைச்சரவை குழு அளித்துள்ள அறிக்கை குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சை, நாகப்பட்டினம் மற்றும் கடலூர் ஆகிய கடலோர மாவட்டங்களில் அதிக அளவில் ஏற்பட்டுள்ள சேத மதிப்பீடு குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இக் கூட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், விவசாயிகளுக்கும் விரைந்து நிவாரணம் வழங்க போர்க் கால அடிப்படையில் நடவடிக்கை களை எடுக்குமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு கருணாநிதி உத்தரவிட்டதாக தெரிகிறது.
வெள்ள நிவாரண பணிகளுக்கு கருணாநிதி முதல் கட்டமாக ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்தார். அதனை தொடர்ந்து மேலும் கூடுதலாக ரூ. 500 கோடியை வெள்ள நிவாரண பணிகளுக்கு ஒதுக்கீடு செய்து முதல்வர் உத்தரவிட்டார்.
தற்போது அதிக அளவில் வெள்ள சேதம் ஏற்பட்டு இருப்பதால் இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி தமிழக அரசு நிவாரண பணிகளுக்கு மேலும் கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிவாரணத் தொகை ரூ. 2லட்சமாக உயர்வு
கூட்ட முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கருணாநிதி, மழை, வெள்ளத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை உயர்த்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இதை ஏற்று ரூ. 1லட்சமாக அறிவிக்கப்பட்ட நிவாரணத் ரூ. 2 லட்சமாக உயர்த்தப்படுகிறது என்றார்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications