சட்டீஸ்கர்: ஆட்சியை தக்க வைத்த பாஜக!

இன்று காலை வாக்கு எண்ணிக்கை நடந்தபோது ஆரம்ப சுற்று வாக்கு எண்ணிக்கையி்ல் ஆளும் பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இரு கட்சிகளும் சம இடங்களில் வெற்றி பெற்றன.
அங்கு மொத்தமுள்ள 90 இடங்களில் ஒரு கட்டத்தில் பாஜக 41 இடங்களிலும் காங்கிரஸ் 41 இடங்களிலும் முன்னிலை வகித்தன. இதனால் இழுபறியான சூழல் நிலவியது.
இதனால் இரு கட்சிகளுமே சம இடங்களில் வெல்லலாம் அல்லது ஒரு சில இடங்களே வித்தியாசம் இருக்கலாம் என்ற சூழல் உருவானது.
ஆனால், அடுத்தடு்த்த சுற்றுகளில் பாஜகவே முன்னிலைக்கு வந்தது. ஆட்சியமைக்க 45 இடங்கள் தேவை என்ற நிலையில் பாஜக 49 இடங்களில் அக் கட்சி வென்றுள்ளது.
இதனால் அங்கு பாஜகவே மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிறது.
தற்போது முதல்வராக உள்ள பாஜகவைச் சேர்ந்த ராமன் சிங் தான், அக் கட்சியின் சார்பில் மீண்டும் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை முன்னாள் முதல்வர் அஜீத் ஜோகி தான் தேர்தல் பிரச்சாரத்தை தலைமையேற்று நடத்தினார். அவர் விபத்தில் சிக்கிய நிலையிலும் வீல் சேரில் அமர்ந்தபடியே மாநிலம் முழுவதும் சுற்றி வந்து பிரச்சாரம் செய்தார்.
ஆனால் மத்தியப் பிரதேச பாஜக முதல்வர் செளகானைப் போலவே சிறந்த நிர்வாகி என பெயர் பெற்றுள்ள அம் மாநில முதல்வர் ராமன் சிங்கை காங்கிரசால் அசைக்க முடியவில்லை.












Click it and Unblock the Notifications