பாதிரியார் நியமனத்தில் பிரச்சனை-சர்ச்சுக்கு பூட்டு!

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் ஒரு தேவாலயத்திற்கு பாதிரியார் நியமிப்பதில் பிரச்சனை வெடித்தால் அந்த தேவாலயத்திற்கு அதிகாரிகள் பூட்டு போட்டனர்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ளது அமீர்பாளையம். இங்கு பிலீவர் சர்ச் ஆப் இந்தியா என்ற அமைப்புக்கு சொந்தமான சார்ச் உள்ளது.

இந்ச சர்ச்க்கு கபிரியல் என்பவர் பாதிரியராக நியமிக்கப்பட்டார். சர்ச் நிர்வாகத்திற்காக சுமார் 60 பேர் கொண்ட கமிட்டியும் நியமிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த சர்ச்க்கு புதிய பாதிரியராக நெல்லை மாவட்டம் சாமுவேல் தங்கராஜ் என்பவரை சர்ச் நிர்வாகம் நியமித்தது. இதற்கு நிர்வாக கமிட்டியைச் சேர்ந்த சிலர் ஆதரவும், சிலர் எதிர்ப்பும் தெரிவித்தனர்.

இதனால் இரு தரப்பிற்கும் இடையே பிரச்சனை வெடித்தது. இரு தரப்பையும் அழைத்து சாத்தூர் போலீசார், தாசில்தார் கண்ணையா ஆகியோர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இதில் சுமூக உடன்பாடு ஏற்படவில்லை.

இதனையடுத்து அந்த தேவாலயத்திற்கு அதிகாரிகள் பூட்டு போட்டனர்.

தேவாலயத்திற்கு அதிகாரிகள் பூட்டு போட்டதற்கு பொது மக்கள் தரப்பில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+