Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தலிபான்கள் அதிரடி தாக்குதல்-150 நேட்டோ வாகனங்கள் எரிப்பு-3 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வட மேற்கு எல்லைப்புற மாகாணத்தில், ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்படவிருந்த நேட்டோ படையினரின் 150 வாகனங்களை தலிபான் தீவிரவாதிகள் அதிரடித் தாக்குதல் நடத்தி தீவைத்து எரித்தனர். 3 பேர் கொல்லப்பட்டனர்.

அல் பைசல் என்ற இடத்தில் உள்ள ஒரு டிப்போவில் இந்த வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினருக்காக இவை அனுப்பப்படவிருந்தன.

இந்த நிலையில் திடீரென பயங்கர ஆயுதங்களுடன் உள்ளே புகுந்த 100க்கும் மேற்பட்ட தலிபான் தீவிரவாதிகள் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். ராக்கெட்களையும், கனரக ஆயுதங்களையும் பயன்படுத்தி அங்கிருந்த 150 வாகனங்களை தாக்கி எரித்தனர்.

டேங்கர்கள், லாரிகள் உள்ளிட்டவற்றையும் அவர்கள் தீவைத்துக் கொளுத்தினர்.

மொத்தம் பத்து ராக்கெட்களை வீசியும், பெட்ரோல், மண்ணெண்ணையைக் கொண்டும் இந்த தாக்குதலி்ல அவர்கள் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்தில் டிப்போ வாட்ச்மேன் உள்ளிட்ட 3 பேர் கொல்லப்பட்டனர்.

நேட்டோ படையினர் மீது தலிபான்கள் நடத்திய மிகப் பெரிய தாக்குதலாக இது கருதப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+