பிச்சையெடுக்க அழைத்து வந்த சிறுவனை மீட்ட போலீஸ்
திருச்சி: திருச்சியில் பிச்சையெடுக்க வைக்க கடத்தி வரப்பட்ட சிறுவனை ரயில்வே போலீசார் மீட்டனர்.
திருச்சி ரயில் நிலையத்தில் 6 வயது மதிக்கதக்க சிறுவன் அங்கும் இங்கும் உலாவிக் கொண்டிருந்தான். இதனைக் கண்டு சந்தேகம் அடைந்த ரயில்வே போலீசார் அந்த சிறுவனை அழைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த சிறுவன் தனது பெயர் அரவிந்தன் என்றும், சொந்த ஊர் கும்பகோணம் என்றும், அங்கிருந்து தாய் மாமன் ஜெயசீலன் என்பவர் தனது உடைந்த கைகளுக்கு சிகிச்சையளிக்க திருச்சி அழைத்து வந்ததாக கூறினான்.
அப்போது சிறுவன் அரவிந்தன் மாமா ஜெயசீலன் கடும் போதையில் இருந்தார். இதனால் அவரது போதை தணியும் வரை காத்திரு்நத போலீசார் பின்பு விசாரித்த போது, சிறுவன் அரவிந்தனை பிச்சையெடுக்க அழைத்து வந்ததாக ஜெயசீலன் கூறினான்.
இதனையடுத்து சிறுவன் அரவிந்தன் சைல்டு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டான். ஜெயசீலனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications