சென்செக்ஸ்: ஐசிஐசிஐ, இன்போஸிஸ் பங்குகள் விலை ஏற்றம்
மும்பை: சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று துவக்கமே பசுமையாக அமைந்த்து. வர்த்தகம் துவங்கியதுமே 134 புள்ளிகள் உயர்ந்தது சென்செக்ஸில்.
அனைத்துத் துறை பங்குகளுமே ஏறுமுகத்தில் இருந்தன.
தேசிய பங்குச் சந்தை நிப்டியில் 47 புள்ளிகள் உயர்ந்தன, எடுத்த எடுப்பில்.
ரிலையன்ஸ், ஜெயப்பிரகாஷ் அசோஸியேட்ஸ், டிஎல்எப், ஐசிஐசிஐ மற்றும் இன்போஸிஸ் பங்குகள் நல்ல விலைக்கு கைமாறின.
11 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 174 புள்ளிகள் உயர்ந்து 9337 ஆகவும், நிப்டி 64 புள்ளிகள் உயர்ந்து 2848 ஆகவும் இருந்தது.
வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 492 புள்ளிகள் உயர்ந்து 9654 ஆக நிலைபெற்றது. நிப்டி 144 புள்ளிகள் உயர்ந்து 2928 புள்ளிகளில் நிலைபெற்றது.
ஆசிய பங்குச் சந்தைகளிலும் இன்று பரபரப்பான வர்த்தகம் நடந்தது. ஹாங்காங் பங்குச் சந்தையில் 500 புள்ளிகளுக்கும் மேல் உயர்வு காணப்பட்டது. சிங்கப்பூர் ஸ்ட்ரெயிட்ஸ் மற்றும் கொரிய சந்தைகளிலும் இன்று நல்ல துவக்கமே நிலவுகிறது.
அதே நேரம், அமெரிக்காவின் நாஸ்டாக் மற்றும் டோவ் ஜோன்ஸில் இன்று இறங்குமுகமாக இருந்தது.












Click it and Unblock the Notifications