மத்திய நிதியமைச்சராகும் எஸ்.எம்.கிருஷ்ணா?
டெல்லி: மத்திய நிதியமைச்சர் பொறுப்பை முன்னாள் கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் ஒப்படைப்பது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
நிதியமைச்சராக இருந்து வந்த ப.சிதம்பரம், உள்துறை அமைச்சர் பதவியில் இருந்து வந்த சிவராஜ் பாட்டீல் பதவி விலகியதைத் தொடர்ந்து அப்பொறுப்புக்கு மாற்றப்பட்டார். நிதியமைச்சர் பொறுப்பை தற்காலிகமாக தற்போது பிரதமரே வைத்துள்ளார்.
ஏற்கனவே அவரிடம் ஓய்வூதியர் நலன், பென்ஷன், திட்டம், அணுசக்தி மேம்பாடு, விண் வெளி ஆய்வு, நிலக்கரி, வனம் மற்றும் சுற்றுச்சூழல், தகவல்-செய்தி ஒளிபரப்பு என 6 இலாகாக்கள் உள்ளன.
இந்த நிலையில் அமைச்சரவையை மாற்றியமைக்க பிரதமர் யோசித்து வருகிறார். அப்போது நிதியமைச்சர் பொறுப்பை வேறு ஒருவரிடம் விட மன்மோகன் சிங் திட்டமிட்டுள்ளார்.
5 பெயர்கள் பரிசீலனை:
நிதியமைச்சர் பொறுப்புக்கு தற்போது ஐந்து பேரின் பெயர்கள் பிரதமரின் பரிசீலனையில் உள்ளன. முதலில் உள்ள பெயர் சி.ரங்கராஜன். முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநராகவும், முன்னாள் ஆந்திர மாநில ஆளுநராகவும் இருந்தவர். தற்போது ராஜ்யசபா எம்.பியாக இருக்கிறார்.
நிதித்துறையில் மிகுந்த அனுபவம் கொண்டவரான ரங்கராஜனை நிதியமைச்சராக்க பிரதமர் விரும்புகிறார். ஆனால் நிதித்துறையில் நிபுணராக உள்ள ரங்கராஜனால், தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் வகையில் திறமை இருக்கிறதா என்பதில் சந்தேகம் இருப்பதால் ரங்கராஜன் நிதியமைச்சராவது கடினம்தான் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து எஸ்.எம்.கிருஷ்ணாவின் பெயர் அடுத்த இடத்தில் உள்ளது. இவரும் பழுத்த அரசியல்வாதிதான். மகாராஷ்டிர மாநில ஆளுநராக இருந்தார். கர்நாடக மாநில துணை முதல்வராகவும், முதல்வராகவும் இருந்தவர்.
இவரது மேற்பார்வையில்தான் கர்நாடக சட்டசபைத் தேர்தலை காங்கிரஸ் சந்தித்தது. ஆனால் தேர்தலில் தோல்வியைச் சந்தித்தது.
நல்ல அனுபவசாலி என்பதால் கிருஷ்ணாவுக்கு நிதியமைச்சர் பொறுப்பு போகக் கூடும். ஆனால் தற்போது அவர் எம்.பியாக இல்லை.
என்றாலும் பதவி ஏற்று 6 மாதம் வரை எம்.பி. ஆக அவகாசம் உள்ளது. அதற்குள் தேர்தல் வந்து விடும் என்பதால் எஸ்.எம்.கிருஷ்ணாவை நிதியமைச்சராக்க ஆதரவு அதிகம் உள்ளது.
இவரை விட்டால் அடுத்தபடியாக நிதியமைச்சர் பொறுப்புக்கு பரிசீலனையில் உள்ளவர் வர்த்தகத்துறை அமைச்சர் கமல்நாத்.
இவர்கள் தவிர மத்திய இணை அமைச்சர் ஜெயராம் ரமேஷ், மேற்கு வங்க மாநில எம்.பி சென்குப்தா ஆகியோரது பெயர்களும் பட்டியலில் உள்ளன.
தற்போதைக்கு ரங்கராஜன் மற்றும் எஸ்.எம்.கிருஷ்ணாவின் பெயர்கள் முன்னணியில் உள்ளன. அதிலும் கிருஷ்ணாவுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
-
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன்












Click it and Unblock the Notifications