பாஜகவின் 'மீசையி்ல் மண் ஒட்டவில்லை' அறிக்கை!
சென்னை: நடந்து முடிந்த 5 மாநில சட்டசபைத் தேர்தலில் 3 இடங்களில் ஏற்பட்ட தோல்வியை வெற்றி போலக் காட்டி பாஜக மாநிலத் தலைவர் இல.கணேசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள 'மாகாண' (மாநிலங்களை திடீரென இப்படித்தான் குறிப்பிட்டுள்ளார்) அறிக்கை:
நடைபெற்று முடிந்த தேர்தலில் பாஜக 2 மாநிலங்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது. காங்கிரஸ் ஒரு மாகாணத்தை தக்க வைத்துள்ளது. ராஜஸ்தானில் பாஜக வாங்கிய ஓட்டு காங்கிரசை விட 3 சதவீதம் அதிகம். ராஜஸ்தானில் காங்கிரசுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
டெல்லியில் கடந்த தேர்தலை விட பாஜக அதிக இடங்களும் அதிக வாக்குகளும் பெற்றுள்ளது. ஆனால் வெற்றி வாய்ப்பினை இழந்துள்ளது.
5 மாகாணங்களில் மொத்தமாக பாஜக 293 எம்எல்ஏக்களும், 279 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் வெற்றி பெற்றுள்ளனர்.
நலத்திட்டங்களில் திருப்தி இல்லாத மாகாணங்களில் மக்கள் அரசுக்கு எதிராக வாக்களித்துள்ளார்கள். மத்திய அரசு எந்த துறையிலும் சிறப்பாக செயல்படவில்லை. எல்லா துறையிலும் தோல்வி கண்டுள்ளது. எனவே எப்போது தேர்தல் வந்தாலும் பாஜக வெற்றி பெறும்.
இவ்வாறு இல.கணேசன் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications