வெள்ளம் பாதித்த பகுதிகளில் மத்திய குழு இன்றும் ஆய்வு
தஞ்சை: மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்றும் மத்திய நிபுணர் குழு 2வது நாளாக ஆய்வு நடத்துகிறது.
தமிழ்நாட்டில் அண்மையில் பெய்த கடும் மழையால் பல மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டது.
இதனால் நிவாரணப் பணிகளுக்காக மாநில அரசு முதல் கட்டமாக ரூ.100 கோடியும், இரண்டாவது கட்டமாக ரூ.500 கோடியும் ஒதுக்கியது. மத்திய அரசு முதல்கட்ட நிதி உதவியாக ரூ.200 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளச் சேத பாதிப்புகளை பார்வையிட மத்திய உள்துறை இணைச் செயலாளர் ஸ்கந்தன் தலைமையில் வந்துள்ள மத்திய நிபுணர் குழுவில், மத்திய திட்டக் குழுவின் மூத்த ஆலோசகர் முரளீதரன், மத்திய ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் மனோஜ் குமார், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுக் கழக செயல் இயக்குனர் சுப்பிரமணியம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இவர்கள் இரு குழுக்களாகப் பிரிந்து வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டு வருகின்றனர்.
நேற்று காலை தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய பகுதிகளில் அக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
பிற்பகலில் திருவையாறு, கும்பகோணம், பாபநாசம் ஆகிய பகுதிகளில் வெள்ளம் பாதித்த இடங்களை அவர்கள் பார்வையிட்டார்கள். தஞ்சை மாவட்டத்தில் சுமார் இரண்டேகால் லட்சம் ஏக்கரில் பயிர்கள் சேதமடைந்தது.
மாநில அரசு ஏக்கருக்கு ரூ.7,500 நஷ்டஈடு அறிவித்து மிக குறைவான தொகை என்றும், அதற்கு பதிலாக ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டுமென்றும் விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.
இன்று திருவாரூர், நாகை மாவட்டங்களில் மத்திய குழுவினர் ஆய்வு செய்கின்றனர்.
பின்னர் நாளை சென்னை திரும்பும் மத்திய குழுவினர் முதல்வர் கருணாநிதியுடன் ஆலோசனை நடத்துகின்றனர்.
-
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
இந்தி மாநிலங்களுக்கு போகும் "ரியல்" பவர்? 816ஆக உயரும் தொகுதிகள்.. மறுசீரமைப்பில் என்ன நடக்கும் -
Low Pressure: அடுத்த ஒரு மணி நேரம் மழை விடாது.. கோவை டூ தென்காசி வரை 17 மாவட்டங்களில் பிச்சு உதறும்! -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை -
வேலூரை மொத்தமாக நனைத்த கோடை மழை.. மதியம் வரைக்கும் 104 டிகிரி வெயில்.. மாலையில் கனமழை! -
RTE admissions: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! ஆர்டிஇ சேர்க்கை எப்போது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? -
இடி, மின்னலுடன் கனமழை.. ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம்! மக்களே உஷார் -
ஓசூர், சேலம், சென்னை.. 24 மணிநேரத்தில் 3000 கோடியில் 3 மெகா முதலீடுகள்.. தேர்தல் நேரத்திலும் மாஸ்! -
கொளுத்தும் வெயில்.. தமிழ்நாட்டில் நடத்த 2 முக்கிய விஷயம்..!! -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்!












Click it and Unblock the Notifications