இந்தோனேசியாவில் அடுத்தடுத்து 4 பூகம்பங்கள்

Subscribe to Oneindia Tamil

ஜகார்தா: இந்தோனேசியாவின் சுலவசி மாகாணத்தில் இன்று அதிகாலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதேபோல சுமத்ரா தீவு உள்ளிட்ட 3 இடங்களில் நேற்று நள்ளிரவில் பூகம்பம் ஏற்பட்டுள்ளது.

இந்த பூகம்பம் குறித்த தகவலை அமெரிக்க புவியியல் கழகம் தெரிவித்துள்ளது.

சுலவசி மாகாணத்தில் இன்று அதிகாலை 4 மணியளவில் இந்த பூகம்பம் பதிவானது. இதன் அளவு 6.3 ரிக்டராகும்.

அதேபோல கடந்த 6 மணி நேரங்களில் இந்தோனேசியாவின் 3 பகுதிகளில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இதில் சுமத்ரா அருகே உள்ள மென்டாவி தீவில், ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அளவு 6 ரிக்டராக பதிவாகியுள்ளது. நள்ளிரவு 12.05 மணியளவில் இது ஏற்பட்டது.

இதனால் சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என்று கூறியுள்ள பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம், வேறு சில பின்விளைவுகள் ஏற்படலாம் என தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+