241 ரன்களில் சுருண்ட இந்தியா-இங்கிலாந்தும் தடுமாறுகிறது!
சென்னை: சேப்பாக்கம் டெஸ்ட்டில் இந்தியா முதல் இன்னிங்சில் 241 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துவிட்டது.
இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை இழந்து 75 ரன்கள் எடுத்து தடுமாறிக் கொண்டுள்ளது.
இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது.
2-ம் நாளான நேற்று இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 316 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் ஆடத் தொடங்கிய இந்தியா நேற்று ஆட்ட நேர இறுதியில் 6 விக்கெட் இழப்பிற்கு 155 ரன் எடுத்திருந்தது.
கேப்டன் டோனி மற்றும் ஹர்பஜன்சிங் களத்தில் இருந்தனர். இந்நிலையில் இன்று இந்தியா தனது முதல் இன்னிங்சை தொடர்ந்து ஆடியது. டோனி மற்றும் ஹர்பஜன் சிங் பொறுப்போடு ஆடினர். இருவரும் சேர்ந்து 7 வது விக்கெட்டுக்கு 75 ரன்கள் சேர்த்தனர்.
பின்னர் ஹர்பஜன் சிங் 40 ரன் எடுத்த நிலையில் பனேசர் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். அதை அடுத்து ஜாகீர்கான் ஆட வந்தார். ஜாகீர்கான் ஒரு ரன்னில் பிளிண்டாப் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
இதனிடையே கேப்டன் டோனி, அரைசதம் அடித்தார். அவர் அடித்து ஆட முற்பட்ட போது, பனேசர் பந்து வீச்சில் 53ரன்களில் ஆட்டமிழந்தார். மதிய உணவு இடைவேளையின் போது இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 241 ரன் எடுத்திருந்தது.
மதிய உணவு இடைவேளைக்கு பிறகு 3வது பந்தில் ஹமீத் மிஸ்ரா 12 ரன்களில் பிளிண்டாப் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இந்தியா 241 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 75 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இங்கிலாந்து தரப்பில் பனேசர் மற்றும் பிளிண்டாப் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.
இந்திய பந்து வீச்சு அபாரம்:
தொடர்ந்து 2வது இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணி பகல் 1.30 மணி நிலவரப்படி மூன்று விக்கெட்டுகளை இழந்து 74 ரன்கள் எடுத்திருந்தது. அலிஸ்டர் குக், பெல், பீட்டர்ஸன் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இப்போது ஸ்ட்ராஸ் 35 ரன்களுடனும் கோலிவுட் 16 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இஷாந்த் சர்மா, யுவராஜ் சிங் மற்றும் அமித் மிஸ்ரா தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.












Click it and Unblock the Notifications